நாட்டில் மிக அதிகமான அளவில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வரும் நிலையில் தற்போது மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதலமைச்சருக்கு கொரோனா:
நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் தற்போது அனைத்து மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இடையே மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு சுமார் 2 நாட்களாகவே காய்ச்சல் இருந்து வந்தது.
இந்தியாவில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்?? மத்திய அரசு ஆலோசனை!!
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்போட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சருக்கே கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.