நாடு முழுவதும் வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!!
அதாவது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும். மேலும் முடிந்தவரை சீக்கிரமாக கோடை விடுமுறை வழங்க வேண்டும். ஏனென்றால் இந்த வெயிலினால் மாணவர்களுக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே இப்போது இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.