இல்லத்தரசிகளே..,ரூ.1,000 உரிமை தொகை., மேல்முறையீடு விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு!!!

0

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில காரணங்களால் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த குடும்ப தலைவிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் தகுதி வாய்ந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி வரை மீண்டும் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின் இது குறித்த அறிவிப்பு வெளியாகாததால் இல்லத்தரசிகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தன. இந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாகவே இதில் யார் யார் ரூ.1000 பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்றும், மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதற்கான குறுஞ்செய்தி அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே ரூ.1000 உரிமைத் தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here