கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் என இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூட்டில் ஆரம்பித்த இந்த மோதல் தற்போது வெடிகுண்டு வரை சென்றுள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் போய் உள்ளது. இந்நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற நெட்டா எப்ஸ்டீன் என்பவர் தாம் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணுடன் வீட்டில் இருந்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அப்போது எதிர்பாராத விதமாக ஹமாஸ் போராளிகள் வீட்டிற்குள் புகுந்து நெட்டா எப்ஸ்டீனை சுட்டு, வெடிகுண்டை போட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். தாம் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்ணை காப்பாற்ற நினைத்த அந்த ராணுவ வீரர் அந்த வெடிகுண்டு மீது படுத்து கொண்டு உடல் சிதறி இறந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு ரூ. 75000 வரை நிதி உதவி…, ரேஷன் கார்டு இருந்தா போதும்…, மாநில அரசு அதிரடி!!