மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் மாணவர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
நீட் தேர்வு கட்டணம் உயர்வு
இந்தியாவில் உள்ள மருத்துவப்படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ் மற்றும் எம்.பி.டி படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுகளுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த போதிலும், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் இந்தியாவில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
+2 முடித்தால் ரூ.25,000, பட்டபடிப்பு முடித்தால் ரூ.50,000 – மாநில அரசு அதிரடி!!
இந்நிலையில் நீட் தேர்வுக்கான தேர்வுக்கட்டணத்தை தேசிய தேர்வுகள் ஆணையம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிசி பிரிவினருக்கான தேர்வுக்கட்டணம் 2,750 ரூபாயிலிருந்து 3,835 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவினருக்கான தேர்வுக்கட்டணம் 3,750 ரூபாயிலிருந்து 5,015 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஓபிசி பிரிவினருக்காக பொது ஜிஎஸ்டி வாரியாக 765 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த தேர்வுக்கட்டணத்தை டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.