சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகிய நிலையில் அவருக்கு பதில் அவர் வேடத்தில் யார் நடிக்க போகிறார் என்பது பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சித்தி 2:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சித்தி 2. இந்த சீரியலின் முதல் பாகம் மக்கள் அனைவராலும் கவரப்பட்டது. மேலும் மக்களின் கோரிக்கைக்கேற்ப இதன் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. சித்தி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது ராதிகா தான். அந்த அளவிற்கு இந்த சீரியல் மூலம் அனைவரையும் கட்டிவைத்துள்ளார் ராதிகா. இந்த சீரியலில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது திடிரென்று யாரும் எதிர்பாராத வகையில் சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது இவர் வேடத்தில் இவருக்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என்பதை பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறது படக்குழு. மேலும் ராதிகா இல்லாமல் ஒரு வாரம் வரை சீரியலை ஒளிபரப்பு செய்யலாம் என்றும், சீரியல் பெரிய அளவில் ஓடவில்லை என்றால் நிறுத்தி விடலாம் என்றும் புலம்பி வருகின்றனர்.
திரிஷ்யம் 2 படம் பற்றி அஸ்வின் கருத்து – நன்றி தெரிவித்த மோகன்லால்!!
மேலும் தற்போது சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதில் மீனா மற்றும் ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது படத்தில் பிசியாக இருந்து வருவதால் இதில் நடிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. எவ்வளவு சம்பளம் கேட்டாலும் பரவாயில்லை இருவரில் ஒருவரை நடிக்க வைத்தாக வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.