தற்போது நாளை அகமதாபாத்தில் வைத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளனர். இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி தற்போது முதல் கட்டமாக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்து அசத்தினர். தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை 2.30 மணி அளவில் அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடக்கவுள்ளது. மேலும் இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நடந்து முடிந்த பகலிரவு போட்டிகளில் நாங்கள் மற்றும் இங்கிலாந்து அணி, இரு அணியினரும் சொதப்பியுள்ளோம். ஆனால் எப்போதும் ஒரே நேரம் போல் இருக்காது. நாங்கள் அடிலெய்டில் தோற்ற பிறகு மெல்போர்னில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தோம். அதனால் நாங்கள் தற்போது மனரீதியாக பலமாக உள்ளோம். மேலும் அடிலெய்டு போட்டி எங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது.
பகலிரவு டெஸ்ட்:
பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்துகளை பயன்படுத்துவர். பிங்க் பந்தில் விளையாடுவது மிக கடுமையான விஷயம். இதனை நாங்கள் கொல்கத்தாவில் வைத்து நடந்த பகலிரவு போட்டியின் மூலம் உணர்ந்தோம். மேலும் நாளைய போட்டியில் அஹமதாபாத் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை இந்த போட்டியில் தவிர்க்க முடியாது.
திரிஷ்யம் 2 படம் பற்றி அஸ்வின் கருத்து – நன்றி தெரிவித்த மோகன்லால்!!
மேலும் தற்போது வரை நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி சிந்திக்கவில்லை. எங்கள் முழு கவனமும் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு நடக்க போகிற டெஸ்ட் போட்டியை பற்றி மட்டுமே உள்ளது. இதன் பின்பு அடுத்த டெஸ்ட் போட்டியை பற்றி சிந்திக்க வேண்டும். எனவே தற்போது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க நேரமில்லை என்று இந்திய அணியின் கேப்டன் கூறியுள்ளார்.