‘இந்த பொய் மட்டும் சொல்லாம இருந்தா, சந்தியா எனக்கு கிடைச்சு இருக்க மாட்டா’ – ராஜா ராணி சீரியலில் ரொமான்ஸ்!!

0

விஜய் டிவியில் பிரபல சீரியலான ‘ராஜா ராணி 2’ இல் சந்தியா படித்தவர் என்று தெரிந்ததால் சரவணனையும் சேர்த்து வெறுக்கும் சிவகாமி சந்தியாவை அடுப்படிக்குள் வரவிடாமல் செய்கிறார். மேலும் சந்தியாவின் அண்ணன் தான் செய்த தவறுக்கு சரவணனிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது நேற்றைய எபிசோடில் பாரு, விக்கிக்கு கால் செய்ய விக்கியின் போன் ஏற்கனவே தொலைந்து போய் இருந்ததால் ரௌடிகள் பாருவை அங்கு வரவைக்கின்றனர்.

இடத்தை பார்த்து சந்தேகிக்கும் பார்வதி தப்பிக்க முயற்சிக்க ரௌடிகள் சுற்றி வளைத்தனர். அப்பொழுது விக்கி சரியான நேரத்திற்கு வர பாருவை காப்பாற்றுகிறார். மேலும் வீட்டில் ஏற்கனவே சந்தியாவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் சந்தியா எவ்வளவு கெஞ்சியும் சிவகாமி கேட்பதாக இல்லை.

சந்தியாவை சமையல் கட்டில் இருந்தும் வெளியேற்றுகிறார். சரவணனை தேடி கடைக்கு வரும் சந்தியா, நடந்தவற்றை கூறுகிறார். சரவணன் 1 வாரம் போகட்டும் எல்லாம் சரி ஆகிடும் என்றும் சமாதானம் செய்கிறார். அடுத்ததாக சந்தியாவின் அண்ணன் மணி சரவணனுக்கு கால் செய்கிறார்.

தான் செய்தது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்கிறார். சந்தியா அவரிடம் பேச வேண்டாம் என்று சொல்ல சரவணன் தொடர்ந்து பேசுகிறார். நான் எதுவும் தவறாக நினைக்கல என்று சொல்லியும் கேட்பதாக இல்லை. அடுத்ததாக நீங்க இப்படி பொய் சொன்னதும் ஒரு நல்லது தான்.

இல்லனா சந்தியா மாதிரி ஒரு பொண்டாட்டி எனக்கு கிடைச்சு இருக்க மாட்டாங்க என்று சொல்கிறார். இதனை கேட்ட சந்தியாவிற்கு ஆனந்த கண்ணீரே வருகிறது. சிவகாமி வழக்கம் போல அனைவரையும் எடுத்தெறிந்து பேசுகிறார். சரவணன் வருவதற்குள் சாப்பிட்டும் விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பொழுது கடையில் வேலை பார்க்கும் சக்கரை சரவணன் வருவதற்குள் அனைவரும் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சியாகிறார். சிவகாமியிடம் வந்து ஏன் என்று கேட்க ‘அவங்க அவங்களுக்கு பசிச்சா அவங்க தான் சாப்பிடணும்’ என்று சொல்கிறார்.

இதனால் கோபமடைந்து சக்கரை சென்று விடுகிறார். வீட்டில் இருந்து கடையில் சரவணனை பார்க்கும் சிவகாமி கண்ணீர் விடுகிறார். இதனை பார்க்கும் சந்தியா எப்படியாவது இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here