இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே பள்ளி தேர்வுகள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளன. இந்நிலையில் சி.ஏ (CA), நீட் (NEET) தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களால் தேர்வுக்கு முறையாக தயாராக முடியாது. இதனால் மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நீட் நுழைவுத் தேர்வு, சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டு ஆணையம் அறிவித்து உள்ளது.
மே 2ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சிஏ (CA) தேர்வுகள் ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 18ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மே 3ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு (NEET) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |