இந்த ஆண்டு பருவமழை காலத்தை முன்னிட்டு தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு வடக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு சில நாட்களாக ஒடிசா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்போது, கடந்த 2 நாட்களாக ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழையின் போது 2 மணிநேரத்திற்குள்ளாக சுமார் 61 ஆயிரம் முறை இடி, மின்னல் ஏற்பட்டுள்ளதாம். இந்த இடி மற்றும் மின்னலில் சிக்கி ஒடிசாவைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தகவல் அளித்துள்ளது.