வெள்ளை உடையில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்தாரா – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

0

லாக்டவுனில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் ஊர் ஊராக சுற்றி வரும் நயன்தாரா தற்போது கோவாவில் ஓய்வெடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் விக்னேஷ் சிவன் கோவா ரிசார்ட்டில் வெள்ளை உடையில் பூ பறித்து மகிழும் நயன்தாராவின் போட்டோவை பதிவிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நயன்தாரா போட்டோஸ்:

தொகுப்பாளினியாக இருந்து தனது திறமையால் முன்னணி நடிகையாக வளர்ந்தவர் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆக அமைந்ததால் விக்னேஷ் சிவன் பிரபலமடைந்தார். ஆனால் படப்பிடிப்பின் போதே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.

நயன்தாரா எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார். நயன்தாராவுடன் ஊர் சுற்றுவது, ஜோடியாக போட்டோ எடுப்பது என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடுவார். நயன்தாராவை பார்ப்பதற்காகவே அவரை பின்தொடர்பவர்கள் பலர். ஓணம் பண்டிகைக்கு தனி விமானத்தில் இருவரும் கேரளாவிற்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோவாவில் தனி ரிசார்ட்டில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, அவரது அம்மா என குடும்பத்துடன் ஜாலியாக ஓய்வெடுத்து வருகின்றனர். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் வெள்ளை உடையில் ஜொலிக்கும் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் கவிதைகளால் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர். நயன்தாரா பூ பறிப்பதை பார்த்த வெறித்தமான ரசிகர்கள் ‘ஒரு பூவே பூ பறிக்கிறதே’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here