தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரை ஹீரோயின்களை விட சின்னத்திரை ஹீரோயின்களுக்கே மவுசு அதிகம். அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் நாயகியான சரண்யா தனது காதலருடன் கடலுக்கடியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
சரண்யா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் சரண்யா. இதில் தனது நடிப்பு மற்றும் அழகால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தனது முதல் சீரியலிலேயே நன்கு பிரபலமடைந்த சரண்யா சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலில் நடித்து வந்தார்.
அதன்பின் பல காரணங்களுக்காக அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். பிறகு விஜய் டிவியில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆயுத எழுத்து சீரியலில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் ரசிகர்களுக்கு தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இது ஒருபுறம் இருக்க இவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது தனது காதலருடன் கடலுக்கடியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த விடீயோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.