இந்தியாவின் தலை சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரரான “தயான் சந்த்” அவர்களை நினைவு கூரும் வகையில் இன்று “தேசிய விளையாட்டு தினம்” கொண்டாடபடுகிறது.
“ஹாக்கி விளையாட்டின் மாயஜாலன்”:
கடந்த 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தார், தயான் சந்த். இந்தியாவின் மிகசிறந்த ஹாக்கி வீரராக கருதப்படும் இவர் 1929, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தை இந்தியா அணிக்காக தங்க பதக்கத்தை பெற்றுத்தந்தவர்.
இவர் 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சென்ற பொது பெர்லின் நாட்டை சேர்ந்த மக்கள் “இந்தியாவில் இருந்து வரும் ஹாக்கி மாயாஜாலனை பார்க்க வாருங்கள்” என்று சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டி வரவேற்றுள்ளனர், இப்படி சிறப்பு வாய்ந்த மனிதரின் பெருமையை உணர்ந்த இந்தியா அரசு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை “தேசிய விளையாட்டு தினம்” ஆக அனுசரிக்கிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அவரை பெருமைபடுத்தும் வகையில் ஆண்டுந்தோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படும்.
இந்த ஆண்டு:
இந்த ஆண்டு கொரோனா காரணமாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளார். இந்தியா தலைநகர் புது டெல்லியில் உள்ள தயான் சந்த் மைதானத்தில் மத்திய அமைச்சர் கிரேன் அவரை நினைவு கூர உள்ளார்.