மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் தேசிய திறந்தநிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள், தாங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் படித்து தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளனர். இந்த பாடத்திட்டம் CBSE பள்ளிகளுக்கு இணையானது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்திற்கு இணையான சான்று வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவிக்கையில், “தேசிய திறந்த நிலைப் பள்ளியில் 10, 12ம் வகுப்பு படித்து பெற்ற சான்றிதழ்கள், தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு படிப்பிற்கு இணையானது அல்ல. அந்த சான்றிதழ்கள் உயர் கல்வி சேர்க்கை, வேலை வாய்ப்புகளில் செல்லாது.” என தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
அட்ராசக்க.., சன் டிவியில் வரவிருக்கும் புதிய தொடர்.., அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா??