நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் வருகிற 25ம் தேதி அன்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடி:
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோய்பரவல் மிக தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதேபோல் பகுதி மற்றும் முழு நேர ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றினை முழுவதுமாக விரட்டுவதற்கு தகுதியுடைவர்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் சமீபத்தில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றினார். அதில் நாட்டில் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு இதுவரை கண்டிடாத அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாட்டில் 3.32 லட்சத்தை கொரோனா பாதிப்பு தாண்டியுள்ளது.
‘எந்த காரணத்தை கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது’ – தமிழக அரசு அதிரடி!!
இந்நிலையில் தற்போது நாட்டின் பிரதமர் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் மக்களிடம் பேசவுள்ளார். அதன்படி அவர் வருகிற 25ம் தேதி காலை 11 மணி அளவில் மன்கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரதமர் உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.