மே 2க்கு பின் ஊரடங்கு இருக்காது – ஸ்டாலின் நம்பிக்கை!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கடந்த ஆண்டை போல் பொதுமுடக்கம் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு:

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது மீண்டும் பொதுமுடக்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனாவின் இரண்டாவது அலை உலகத்தையே அலறவைத்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டி வருவது வேதனை அளிக்கிறது. மக்களின் உயிரை காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாவலர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோரின் சேவை போற்றுதலுக்குரியது. மேலும் தற்போது நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த செய்தி அனைவரையும் வேதனையடைய செய்கிறது. கொரோனாவின் முதல் அலையின் பொழுது முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

‘எந்த காரணத்தை கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது’ – தமிழக அரசு அதிரடி!!

இதனால் நிதிநெருக்கடி, உளவியல் சிக்கல், தனிநபர் பாதிப்பு என பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தவித்தனர். எனவே தற்போது இரண்டாவது அலையின் பொது தமிழகத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் மற்றும் கழகத்தினர் கடைபிடிக்க வேண்டும். மேலும் மே 2ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here