நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு சில மாநிலங்களில் மிக அதிகமான அளவில் இருந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்து உயர் மட்ட குழுக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் குறையாமல் மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் சுமார் 12 மாநிலங்களில் மட்டும் மிக அதிகமான அளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த 12 மாநிலத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ளன.
‘முதல்ல எல்லாரும் வீட்டுக்கு போகட்டும் அப்புறம் நான் போறேன்’ – ‘தல’ தோனி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
எனவே தற்போது இதுகுறித்து பிரதமர் மோடி உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளன. இந்த கூட்டத்தில் 12 மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்துவது குறித்தும், கொரோனா பாதிப்பு நிலவரம், மருந்து இருப்பு, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.