இயக்குனர் அமீருக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை., இது மட்டும் தான்? போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தகவல்!!!

0

முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை, கடந்த மாதம் 9ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர்-இடம், டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் கடந்த 3 ஆண்டுக்கான வங்கி பரிவர்த்தனை, சொத்து விவரம் தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கான கால அவகாசத்தை மெயில் மூலம் அமீர் கேட்டு இருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 9) காலை முதல் அமீர், ஜாபர் சாதிக் ஆகியோரின் வீடு மற்றும் சொந்தமான இடம் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இயக்குனர் அமீருக்கு புதிய சம்மன் எதுவும் அனுப்பவில்லை. ஆவணங்களை சமர்பிப்பதற்கான நினைவூட்டல் மட்டுமே அனுப்பி இருந்ததாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

 PF பணத்தை வீட்டில் இருந்து எடுப்பது எப்படி?? முழு விவரம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here