விஜய் டிவியில் தற்போது நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் பல சஸ்பென்ஸ்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வெற்றியை கொண்டாடி வருகிறது.
நாம் இருவர் நமக்கிருவர்
நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. முத்தரசனை கொலை செய்தது யார்?? என்ற கேள்வி அனைவருக்குமே இருந்து வரும் நிலையில் அடுத்தடுத்து விசாரணைகள் நடந்து வருகிறது. கண்டிப்பாக இதனை மாயன் செய்யவில்லை என்பது மட்டும் அனைவர்க்கும் தெரியும்.
ஆனால் இதனை யார் செய்தது என்பது மட்டும் பெரிய சஸ்பென்ஸாக உள்ளது. இன்றைய எபிசோடில் சரண்யா, காயத்ரி, மற்றும் ஐஸ்வர்யாவை விசாரிக்க போலீசார் வர மூவரமுமே பயப்படுகின்றனர். இந்த சஸ்பென்ஸால் தான் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.
இந்நிலையில் சீரியல் தற்போது ஒரு வருடத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஏற்கனவே நாம் இருவர் நமக்கிருவர் சீரியலின் முதல் பாகம் லாக்டவுன் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த இரண்டாவது பாகம் வெற்றிபெறுமா?? என்று சந்தேகித்து வந்த நிலையில் தற்போது 1 வருடத்திற்கு மேலாக ஓடிக்கொண்டுள்ளது. இன்றோடு ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இது வரை 250 எபிசோடுகள் ஒளிபரப்பாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்