முத்தரசன் கொல்லப்பட்டாரா?? அந்த மர்ம நபர் யார்?? ஐஸ்வர்யாவிடம் சிக்கும் முக்கிய கடிதம்!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் முத்தரசனின் நிலை என்ன என பல ட்விஸ்டுகளுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.

நாம் இருவர் நமக்கிருவர்

ஐஸ்வர்யா இத்தனை நாட்கள் பயந்து இருந்த நாட்கள் போய் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று போலீசிடம் புகாரளிகிறார். போலீஸ் முத்தரசை அடித்து இழுத்து செல்ல வடிவின் அண்ணன் முத்தரசை ஜாமினில் வெளியில் எடுக்கிறார். மேலும் முத்தரசு கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருக்கிறார்.

முத்தரசை கொலை செய்த அந்த மர்ம நபர் யார் என்றும் தெரியவில்லை. இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா இதுநாள் வரை நடந்ததெல்லாம் நினைத்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்து முத்தரசு ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய ஏமாற்றிய விஷயம், திருமணத்திற்கு பிறகு செய்த கொடுமை அனைத்தும் நினைவிற்கு வருகிறது.

இரவு முழுக்க தூங்காமல் அதையே நினைத்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக வீட்டின் கதவை யாரோ தட்ட வெளியே சென்று ஐஸ்வர்யா பார்க்க ஒரு லெட்டரும் போனும் இருப்பதை பார்க்கிறார். அதில் முத்தரசு போன் இருப்பதை பார்த்து ஷாக்காகிறார். மேலும் லெட்டரில் இந்த போனை உடைத்து விட்டு உன் வாழக்கையை பாரு என்று எழுதியிருக்க ஐஸ்வர்யா கதறி அழுகிறார்.

அப்பொழுது காயத்ரியும் அங்கு வர போன் மட்டும் லெட்டரை எரிக்கிறார். வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அந்த மர்ம நபர் யார் என்று அனைவரும் யோசிக்கின்றனர். எல்லாருக்கும் மாயன் மீது சந்தேகம் வருகிறது. ஆனால் மாயனும் இதனை செய்ததாக தெரியவில்லை. ஒருவேளை கத்தி செய்திருப்பாரோ என்ற சந்தேகம் கூட வருகிறது. மேலும் வடிவு தனது மகனை காணாமல் வீட்டில் உள்ள அனைவரையும் மிரட்டி வருகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here