தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசன், வைரமுத்துவுக்கு பிறகு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார் போல் பாடல்களை எழுதி வியக்க வைத்தவர் தான் நா. முத்துக்குமார். இவர் எழுதிய எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் தான். மேலும் சாதாரண படங்கள் கூட வெற்றி பெற்றதற்கு அவருடைய பாடல் வரிகள் தான் காரணம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய பாடல் வரிகள் நின்னு பேசும். இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நேரத்தில் திடீரென அவர் உயிரிழந்த சம்பவம் திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. அவர் இறந்து 7 வருடங்கள் கடந்த நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் நா. முத்துக்குமார் சென்சார் போர்டுக்கு அல்வா கொடுத்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். அதாவது மாதவன் நடிப்பில் வெளியான டும் டும் டும் படத்தில் இடம்பெற்ற அத்தான் வருவாக என்ற பாடலில் “புத்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே… போதி மர உச்சியிலே ஊஞ்சல் ஆடுவானே “என்கிற வரிகளை முதலில் எழுதி இருந்தாராம் நா.முத்துக்குமார். இதற்கு சென்சார் போர்டு எப்படி புத்தரை தவறாக குறிப்பிடலாம் என்று சொல்லி வரிகளை மாற்ற சொன்னார்களாம்.
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் 15 சதவீதம் அதிகரிப்பு? முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!!!
அதன் பின்னர் புத்தனை சித்தன் ஆக்கி, போதிமரத்துக்கு பதிலாக ஆலமரம் என மாற்றி, ‘சித்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே… ஆலமர உச்சியிலே ஊஞ்சல் ஆடுவானே’ என திருத்தி எழுதிக் கொடுத்தாராம் முத்துக்குமார். மேலும் அந்த வரிகளை எப்படியாவது ஏதாவது பாடலில் போட்டு விட வேண்டும் என்று எண்ணிய முத்துகுமார் விக்ரம் நடித்த சாமி படத்தில் இடம்பெறும் ‘அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு’ என்கிற பாடலில் காதல் வந்து நுழைந்தால் போதி மர கிளையில், ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்’ என்ற வரிகளை வைத்து சென்சார் போர்டுக்கு அல்வா கொடுத்துள்ளார்.