நடிகர் ரஜினிகாந்தின் 90ஸ் காலத்து படங்களில் பணியாற்றிய அனுபவம் தனக்கு நரக வேதனையை அளித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மனம் திறந்த இசையமைப்பாளர்:
இசை உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதனை அடுத்து, அவர் இசையமைத்த கிழக்கு சீமையிலே, ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் இன்று வரை கம்பீரமாக நிலைத்து நிற்கிறது.
இவர், ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஆஸ்கர் நாயகனாக மாறினார். இந்த நிலையில், ரஜினிகாந்தின் 90ஸ் காலத்து படங்களில் பணியாற்றிய அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, ரஜினியின் படங்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் முடித்து கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், மின்சாரம் தடைபடும் அந்த நேரத்தில் தான் நரக வேதனையை அனுபவித்ததாகவும் தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்