ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி அடுத்த மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயிற்சியை காணவே வரும் கூட்டம்..!
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம் ஆனால் ஒரு வீரர் பயிற்சியில் ஈடுபடும் போதே ரசிகர்கள் கூட்டம் அதிகரிப்பது தோனிக்காக மட்டுமே இருக்கும். ஆமாம் தோனி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்க்க வருவர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. எனவே இந்த வருடம் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவுள்ள தோனியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |