இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 191 ரன்கள் அடிக்க, அதன் பிறகு விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் மட்டுமே குவித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் 19வது மற்றும் 20வது ஓவரில் 100 சிக்சர்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் 300 ஆட்டமிழக்கங்களை முடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இச்சாதனை படைத்த தோனிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.., இன்று முதல் அமலுக்கு வரும் புது வசதி.., தெற்கு ரயில்வே அதிரடி!!!