மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.., மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும்.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளும், நலத்திட்டங்களையும் அந்தந்த மாநில அரசு வழங்கி வருகிறது. இது தவிர மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியமாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓய்வூதியம் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது இனி வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது தவிர தொழு நோயால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரம் பேருக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here