வேலை இல்லாதவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.., இனி மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை.., அரசு அறிவிப்பு!!

0
வேலை இல்லாதவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.., இனி மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை.., அரசு அறிவிப்பு!!
வேலை இல்லாதவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.., இனி மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை.., அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் பல இளைஞர்கள் வேலையில்லாமல் குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறோம் என வேதனைக்குள்ளாகி வருகின்றனர். இவர்கள் சோர்வடையாமல் மேலும் முயற்சிகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் மாதம் ரூ.2,500 உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். அதோடு சில தகுதிகளையும் வழி வகுத்துள்ளனர். அதன்படி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 35 வயது வரை உள்ள வேலையில்லாதவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவும் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

ஒய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., ரூ.1,031.32 கோடி வழங்க முடிவு.., முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

அதேபோல் அரசு மற்றும் தனியார் வேலைகளை நிராகரித்தவர்களுக்கு இத்திட்டமும் நிராகரிக்கப்படும். இத்தகுதிகள் உடையவர்கள் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் தகுதியானவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை செலுத்தப்படும். ஒரு வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லையெனில் மேலும் ஒரு வருடத்திற்கு சலுகை நீட்டிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here