முதுமலை தெப்பக்காட்டில் வளர்க்க கொண்டு செல்லப்பட்ட தாயை பிரிந்த குட்டி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குட்டியானை உயிரிழப்பு:
முதுமலை தெப்பக்காடு பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் அமைந்துள்ளது. இதில் ஏராளமான காட்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட The Elephant Whisperers படம் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை பெற்றது. இதில் நடித்த பொம்மன், பெள்ளி இருவரையும் முதல்வர் உட்பட ஏராளமான பிரபலங்கள் பாராட்டினர். இதனால் உலகம் முழுவதும் முதுமலை தெப்பக்காடு பிரபலமானது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனை தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடு பட்டி வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை ஒன்று 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அந்த குட்டி யானையை மீட்டெடுத்த வனத்துறையினர் முதலுதவி செய்து அதனை தாய் யானையிடம் சேர்த்து விட வனத்துறையினர் எவ்வளவோ பாடுபட்டும் முடியவில்லை. அதன் பின்னர் அந்த யானையை முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
VIP-களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.., இனி மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை.., அரசு அறிவிப்பு!!
குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பை ஆஸ்கர் புகழ் பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். சமீபத்தில் கூட அந்த இருவரும் சேர்ந்து குட்டி யானையை கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவர்கள் கொஞ்சி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.