ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக சபையில் நேற்று போக்குவரத்து துறைக்கான மானியக் கோரிக்கை நடைபெற்ற நிலையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதில் ஒன்றான போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ல் இருந்து 58 ஆக குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு போக்குவரத்து ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மற்றொரு அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 ஆம் வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு, உயிரிழந்த பணியாளர் ஆகியோர் உட்பட மொத்தம் 3,414 நபர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ரூ.1031.32 கோடி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., மேயர் இன்று தாக்கல் செய்கிறார்!!!
கூடிய விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஊழியர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழக போக்குவரத்து கழகம் பொருளாதார நெருக்கடியை சந்தித்த போதிலும் ஊழியர்களின் நலன் கருதி இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.