இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சுயக்கட்டுப்பாடு முக்கியம்..!
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி இந்தியாவில் இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் எனக்கு முக்கியம், எனவே மக்கள் 21 நாட்களையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
கொரோனா பரவலைத் தடுப்பது மிகக்கடினம் எனவும், காட்டுத்தீ போல் அது பரவிவருகிறது எனவும் அவர் எச்சரித்தார். எனவே ஊரடங்கை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார். உறவினர்கள் என யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திணறுகின்றனர். எனவே மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தியாவில் 100% கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேம்படுத்த ரூ. 15,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் மோடி தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |