அருகில் வந்த தொண்டரை ஆவேசமாக தள்ளிவிட்ட அமைச்சர் உதயகுமார் – வைரலாகும் வீடியோ!!

0
Minister Uthayakumar
Minister Uthayakumar

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தொண்டர் ஒருவரை தள்ளி விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தாலும் மக்கள் இன்னும் சில நாட்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரி வர பின்பற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மக்கள் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து அமைச்சர் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடட்டார். இதற்கிடையில்மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கும் போது ஒரு தொண்டர் அமைச்சருக்கு எதிராக வந்தார். அவரை அமைச்சர் வலுக்கட்டாயமாக தள்ளி விட்டு உள்ளார். கோபமாக போலீசாரிடம் எதுவோ சொல்லியும் உள்ளார். இந்த சம்பவம் படம்பிடிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

‘ரஜினி, கமலை அடிக்கிற அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வரக் கூடாது’

அமைச்சர் ஒருவர் தொண்டருடன் இவ்வாறாக நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமைச்சர்கள், தொண்டர்களிடம் மரியாதையாக கொள்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. அமைச்சரின் இந்த நடவடிக்கையால் அனைவர் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here