தமிழகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அமலாக்கத்துறையினரால் காவலில் எடுத்து விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தொடுத்த மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதில் “இதுவரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினரால் காவலில் எடுக்க இயலாததால், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்கலாம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து, தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த காவலில் விசாரணைகள் மட்டுமில்லாமல் செந்தில் பாலாஜியின் உணவு, தூங்கும் நேரம் என அனைத்தையும் அமலாக்கத்துறையினரே முடிவு செய்வார்கள் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., செப்டம்பர் 30 வரை இலவச சேவை?