அஞ்சலக சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மூத்த அஞ்சலக கண்காணிப்பாளர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வங்கியின் சேமிப்பு கணக்கைப்போல் அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய திட்டம் அறிமுகம் செய்தது. இந்த சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ 50 ஆக நிர்ணயம் செய்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் அஞ்சலக சேமிப்பு கணக்கின் குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ 500 ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பர் 12ம் தேதிக்குள் செலுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னை நகர தெற்குப்பிரிவின் அஞ்சலக மூத்த கண்காணிப்பாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும், டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
2020 இல் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்கள்!!
இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.