செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது பல ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துவரும் ப்ரியா தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி ஷங்கர்
பிரபல சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா. ஆரம்ப காலத்தில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அந்த வேலையிலேயே நீடித்திருந்தார். அதன் பிறகே அவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற நாடகத்தில் கமிட் ஆனார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதன்முதலில் இவரை பார்த்ததுமே அனைவர்க்கும் பிடித்து போனது. அதனாலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்காக தான் அந்த சீரியலையே பார்த்தனர் ரசிகர்கள். ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கும் இவரை யாருக்கு தான் பிடிக்காது.
அந்த சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் சபோக போக மொக்கையாக தான் இருந்தது. ஆனாலும் ப்ரியாவின் மார்க்கெட் குறையவில்லை. இடையிலேயே அந்த சீரியலை விட்டு போனதால் அதில் சைத்ரா ரெட்டி நடித்திருந்தார். ஆனால் மக்களுக்கு பிரியா வெளியேறியது ஏமாற்றமே.
அவரது அழகே அந்த சிரிப்பு தான். அந்த அளவிற்கு மக்கள் ப்ரியாவை அந்த சீரியலில் மிஸ் செய்தனர். அவருக்கு எதோ திருமணம் என்றும் வதந்திகள் பரவியது. அதற்கு ஏற்றார் போல தனது காதலனுடன் இருக்கும் பல புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். ஆனால் அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை.
மாறாக அவர் வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படமே ‘மேயாத மான்’ அந்த படம் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அவருக்கு சினிமா துறையில் வரவேற்பு கிடைத்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் தற்போது நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் தனது புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் பிரியா பல கவர்ச்சியான உடைகளிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அதன் ஆரம்பக்கட்டமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தொடையழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.