இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பல முக்கியமான பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் ஐபிஎல் தொடரில் கலந்துகொண்ட வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான மைக் ஹசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைவரும் பதட்டம் அடைந்தனர். தொடர்ந்து வீரர்கள் மத்தியில் தொற்று கண்டறியப்பட்டு வந்ததால் வீரர்களின் நலன் கருதி ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைக்க முடிவு செய்தது. அதேபோல் தேதி அறிவிக்காமல் பிசிசிஐ 14வது ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவிற்கு உதவி செய்ய துடிக்கும் அமெரிக்கா – தடுப்பூசியை இணைந்து தயாரிக்க முழு ஆர்வம்!!
முன்பு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்ட ஹசிக்கு சென்னையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். நாளடளவில் அவரது உடல் நலம் முன்னேற்றம் பெற்று தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டார். தற்போது அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்து பார்க்கையில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.