இந்தியாவிற்கு உதவி செய்ய துடிக்கும் அமெரிக்கா – தடுப்பூசியை இணைந்து தயாரிக்க முழு ஆர்வம்!!

0

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக உலக அளவில் இந்திய நாடு தான் மிக அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு உதவி செய்வதற்கு முழு ஆர்வத்தை காட்டி வருகிறது.

அமெரிக்கா:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் எதிர்பார்க்காத வகையில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது நாட்டில் தொற்றினால் உயிரிழப்பவர்களின் விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 2 மாத காலமாகவே மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது அமெரிக்கா இந்தியாவிற்கு உதவி செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது இதுகுறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி டேனியல் ஸ்மித் கூறுகையில் இந்தியாவின் தற்போதையை நிலை குறித்து அமெரிக்கா கவலை அடைந்து வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்க முடிவு செய்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் இந்த 4 மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

அதன்படி இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசியை தயாரிக்க அமெரிக்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதனை முன்னிட்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை தயாரிப்பதற்கான அனைத்து வழிவகையையும் அமெரிக்க ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here