RCB அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல்லில் இருந்தே விலகி உள்ளார்.
MI வீரர்:
ஐபிஎல் தொடரில், இன்று மும்பை இந்தியன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த போட்டியானது, இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பிளே ஆப்க்கு தகுதி பெற இந்த போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், தீவிரமாக தயாராகி வருகின்றன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான, ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஜோஃப்ரா ஆர்ச்சர் சிகிச்சைக்காக தாயகம் (இங்கிலாந்து) சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, இவருக்கு தகுந்த மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு வீரரான கிறிஸ் ஜோர்டான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய உள்ளதாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
????? ?????? ????? ?????? ???????
Chris Jordan will join the MI squad for the rest of the season.
Chris replaces Jofra Archer, whose recovery and fitness continues to be monitored by ECB. Jofra will return home to focus on his rehabilitation.… pic.twitter.com/wMPBdmhDRf
— Mumbai Indians (@mipaltan) May 9, 2023