ஆந்திர மாநிலத்தில் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் காவல்துறை பெண்களுக்கான சூப்பர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக அவர்கள் தாங்களே அழைத்து வீடு வரை சென்று விட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த திட்டத்தின் படி காவல்துறை வேலை மற்றும் தனிப்பட்ட காரணங்களால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனியாக செல்லும் பெண்கள், 100, 112, 29 51 75 என்ற எண்ணிற்கு கால் செய்தால் போதும். சம்பவ இடத்திற்கு பெண் காவல்துறை அதிகாரிகள் வந்து அவர்களை அழைத்து செல்வார்கள். மேலும் இப்படி இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
ஊதியத்துடன் விடுமுறை அளித்த அரசு…, தேர்தல் காரணமாக அதிரடி அறிவிப்பு!!
மேலும் இந்த திட்டம் சரியாக செய்யப்பட்டால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இப்படி பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த காவல்துறை சூப்பிரண்டு பிரசாந்திக்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.