கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நாளை (மே 10) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல முன்னணி கட்சிகள் சார்பாக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளன. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று (மே 8) மாலை 5 மணியுடன் முடிவடைந்ததையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவரும் வாக்களிக்க வேண்டி, தேர்தலுக்காக மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வழக்கம். இந்த வகையில், கோவாவில் வசிக்கும் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்காக, கோவா அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, கோவாவில் உள்ள கர்நாடகா வாக்காளர்களுக்கு, தேர்தலுக்காக மே 10ம் தேதி அன்று மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கோவா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது, அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.