அரசியலில் களமிறங்கும் மீரா மிதுன் – திருப்பதி கோவிலில் வழிபாடு!!

0
meera mithun
meera mithun

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மீராமிதுன். பல சர்ச்சைகளை கிளப்பி அதன் மூலம் பிரபலத்தை தேடி வருகிறார். தற்போது திருப்பதிக்கு சென்றிருக்கும் மீராமீதுன் அரசியலில் நுழைவதற்காக வெங்கடாஜலபதியிடம் ஆசி பெற வந்ததாக கூறியுள்ளார். இதனால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

மீரா மிதுன்

மாடலிங் துறையில் இருந்த மீரா மிதுனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே பல சண்டைகள் தான் என்றே சொல்லலாம். மேலும் அவர் வெளியில் பலரையும் அழகி போட்டியில் கலந்துகொள்ள வைக்கிறேன் என்று கூறி பண மோசடி செய்ததாகவும் பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

kamal-meera-biggboss
kamal-meera-biggboss

மேலும் ஜோ மைகல் என்பவர் இதனை ஆதரத்துடனும் நிரூபித்தார்.  பிக் பாஸ் வீட்டில் சேரன் மீதும் சொல்ல கூடாத பழியை போட்டு இதனால் பல பிரச்சனைகளும் உருவானது. கடைசியில் இந்த காரணத்திற்காகவே மீரா மிதுனை வீட்டை விட்டு வெளியேற்றினர். வெளியே வந்த மீரா சும்மா இல்லாமல் பல சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டார்.

kamal-meera-biggboss-
kamal-meera-biggboss-

பிக் பாஸ் வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரும் தன்னிடம் மிகவும் வழிந்ததாகவும், மற்றவர்களுக்காக பயந்து தான் என்னிடம் பேசவில்லை என்றும் கூறினார். தான் அழகாக இருப்பதை பார்த்து பலரும் பொறாமை படுவதாகவும் கூறி வந்தார். இதோடு நிறுத்தாமல் தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய், சூர்யாவை பற்றி இழிவாக பேசினார்.

meera mithun
meera mithun

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தன் நடிப்பை பார்த்து எங்கே நான் பெரிய ஆளாக மாறி விடுவேனோ என்று பயத்தில் சூர்யா தன்னை நடிக்கவிடாமல் செய்ததாக கூறியுள்ளார். இது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. மேலும் அவர்களது மனைவியை பற்றியும் கேவலமாக பேசினார். இதனால் மக்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக மீரா மிதுன் உருவ படத்தை எரித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

meera mithun
meera mithun

அப்பொழுது கூட அடங்காமல் தனக்கு மும்பை பக்கத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறி வந்தார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை கழுவி ஊற்றியும் வந்தனர். இந்நிலையில் தற்போது திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்துள்ளார். மேலும் அதை பற்றி வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தான் கூடிய விரைவில் அரசியலில் இறங்கப்போவதாகவும், அதற்கு ஆசி பெறவே வெங்கடாஜலபதியை தரிசனம் பெற வந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் கோவில் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் ஜெகன் மோகனுக்கு சல்யூட் என்று கூறியுள்ளார். இவர் அரசியலில் இறங்கப்போவதை தெரிந்து பலரும் இவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here