தமிழில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளவர் குஷ்பூ சுந்தர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பி.ஜெ.பி., கட்சிக்கு மாறியிருக்கும் குஷ்பூவை மீரா மிதுன் கிண்டலடித்து ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கடுப்பான குஷ்பூவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மீரா மிதுன் ட்வீட்:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா மிதுன். வீட்டில் இருக்கும்போதே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார் மீரா. மேலும் அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பல வீடீயோக்களை வெளிட்டு பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார். பிரபலத்திற்காக என்னன்னவோ கண்டமேனிக்கு பேசி பலரும் இவரை கழுவி ஊற்றி வந்தனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பலரும் தன்னை பார்த்து பொறாமை படுவதாகவும், தனது வளர்ச்சியை தடுப்பதாகவும் கூறி வந்தார். இவருக்கு மும்பை பக்கத்தில் அதிக வரவேற்பும் உள்ளதாம். அதுமட்டுமல்லாமல் விஜய், சூர்யா என பல பிரபலங்களை கண்டபடி பேசினார். இவர் எப்பொழுது தமிழ்நாட்டில் சிக்குவார் என்று பலரும் வெறிகொண்டு காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மீராமிதுன் அரசியலில் களமிறங்கப்போவதாகவும் கூறி வந்தார்.
அதற்காக ஏழுமலையானை தரிசித்து வந்ததாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். யார் இவரை எவ்வளவு கேவலமாக பேசினாலும் எதையுமே கண்டுகொள்ளாமல் தன் இஷ்டத்திற்கு பல வேலைகளை பார்த்து வருகிறார் மீரா மிதுன். இவரது நிஜ பெயர் கூட மீரா மிதுன் கிடையாது தமிழ் செல்வியாம். பலரையும் தாக்கி பேசி வந்த இவர் தற்போது குஷ்பூ பக்கம் திரும்பியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்பொழுது குஷ்பூ பி.ஜெ.பி கட்சியில் சேர்ந்ததை அடுத்து ஒரு விபத்து ஏற்பட்டது. எப்படியோ கடவுளின் புண்ணியத்தால் குஷ்பூ தப்பித்து வந்துள்ளார். இதற்கு மீரா மிதுன் அவரை பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதாவது முதலில் தி.மு.க கட்சியில் இணைந்தீர்கள் 10 வருடமாக அவர்களுக்கு ஆட்சியே கிடைக்கவில்லை.
அடுத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திர்கள் அதுவும் 10வருடமாக எந்த முன்னேற்றமும் இன்றி ஆட்சியையும் பிடிக்கவில்லை. இப்பொழுது பி.ஜெ.பியில் சேர்ந்த நாளே இப்படி ஆகிவிட்டது. உங்களோட அடுத்த திட்டம் என்ன குஷ்பூ?? என்று பதிவிட்டுள்ளார். இது பலரையும் கடுப்பாக்கியுள்ளது. அனாலும் பலரும் இதனை கண்டுகொள்ளாதீர்கள் குஷ்பூ என்று அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.