அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா எதிரொலி.., இதை செய்யக்கூடாது.., தடை விதித்த மாநில அரசு!!!

0
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா எதிரொலி.., இதை செய்யக்கூடாது.., தடை விதித்த மாநில அரசு!!!
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து பல்வேறு கட்சி தலைவர்களும், பொது மக்களும் விழாவை காண அயோத்திக்கு செல்ல உள்ளனர். மேலும் இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனால் அயோத்தியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டின் 11 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. அதாவது அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here