தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் 400 மீ ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 12ஆம் வகுப்பு மாணவன் ரிஷி பாலன் (வயது 17), ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதோடு மாணவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்டோ பயணத்திற்கான பிரத்யேக செயலி., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!