மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் ஒரு பெண் குழந்தைக்கு தந்தை ஆகியுள்ளார்.
அப்பாவான மார்க் ஜூகர்பெர்க்
உலகளவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி சமூக ஊடகங்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை. இந்த செயலிகளை இயக்கும் தொழில்நுட்பக் குழுமம் மெட்டா. இந்த மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனரான மார்க் ஜூகர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா சான் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பொன்னியின் செல்வன் 2″ ட்ரைலர் தேதி வெளியீடு.. படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்த நிலையில், 3 ஆவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22, 2022 அன்று மார்க் ஜூகர்பெர்க் – பிரிசில்லா தம்பதியினர் தங்களது 3 ஆவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளார் மார்க் ஜூகர்பெர்க். இந்த குழந்தைக்கு அவுரேலியா (Aurelia) என்று பெயர் சூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.