த்ரிஷாவிடம் மீண்டும் பிரச்சனையை இழுத்த மன்சூர் அலிகான்.., நீதிமன்றத்தில் தொடர்ந்த புது வழக்கு!!

0
த்ரிஷாவிடம் மீண்டும் பிரச்சனையை இழுத்த மன்சூர் அலிகான்.., நீதிமன்றத்தில் தொடர்ந்த புது வழக்கு!!

சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்த விஷயம் என்றால் அது மன்சூர் அலிகான் – திரிஷா விவகாரம் தான். அதாவது லியோ படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த த்ரிஷாவை அண்மையில் மன்சூர் அலிகான் தவறாக பேசியதாக பெரும் சர்ச்சையை கிளம்பியது. இது குறித்து மன்சூர் அலிகானுக்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது மன்சூர் அலிகான் – திரிஷா சமரசம் ஆன நிலையில் தற்போது மன்சூர் அலிகான் மீண்டும் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார். அதாவது நான் பேசிய வீடியோவை முழுசா பார்க்காமல் என்னுடைய பெயருக்கு அவதூறு பரப்பிய திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரிடம் மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார். தன்னுடைய பெயரை களங்கப்படுத்திய அவர்கள் எனக்கு 1 கோடி மான நஷ்ட ஈடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here