விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல் வீட்டில் நடந்த சண்டைகளை பற்றி போட்டியாளர்களிடம் விசாரிப்பது வழக்கம். இந்நிலையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில் கமல் ஊரே வெள்ளத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கும் விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் அவர்கள் விளையாட்டில் மூழ்கியுள்ளனர். வெளியே தண்ணீர் வடிந்த பின் தரை தெரியும். ஆனால் இவர்கள் விளையாடும் விளையாட்டு முடிந்தாலும் தரம் தெரியாது. ஏனென்றால் கொஞ்சம் கூட தரமில்லாமல் விளையாடி வருகின்றனர். எனவே தரமில்லாமல் விளையாடும் போட்டியாளர்களிடம் இன்று விசாரணை செய்வோம் என கமல் அதிரடி அப்டேட் கொடுத்துள்ளார்.