
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் பழங்குடியினர் பட்டியலில் மைத்தேயி இனக்குழுவினரை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இனக்குழுவினர் போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்தப் போராட்டமானது காலபோக்கில் வன்முறையாக மாற நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.,
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வன்முறையானது படிப்படியாக தற்போது, குறைந்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வை அரசு அறிவித்துள்ளது. அதாவது, பிஷ்னுபுர், தவுபால், காக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த தளர்வை பயன்படுத்திக் கொண்டு கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபடக்கூடாது என எனவும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தலைவர் அழைப்பு., டெல்லிக்கு புறப்பாடு!!!