தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண உதவித்தொகை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து தென் மாவட்டங்களும் மழையால் பாதித்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.1000, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.6000 வெள்ள நிவாரண தொகையும் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இந்த நிவாரண தொகை டோக்கன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் கள்ள மார்க்கெட்டில் டோக்கன்களை விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வைத்து பொதுமக்களும் ரேஷன் கடைகளில் பொய்யாக பணம் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் வெள்ள நிவாரண உதவித்தொகை பெற ரெக்கார்டில் பதிவாகியுள்ள நபரின் கைரேகை கட்டாயம் தேவை என தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
‘அயலான்’ பட பாணியில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!