இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கு சில காரணங்களால் தொடக்க விழா நடைபெறாமல் நேரடியாக போட்டிகள் தொடங்கின. இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு முன்பாக பிசிசிஐயும், ஐசிசியும் இணைந்து ஒரு விழா கொண்டாட உள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதன்படி, வரும் அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன் விழா நடைபெற உள்ள நிலையில், விழா சிறப்பிக்க இந்தியா திரையுலக நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பிரபல பாடகர் அர்ஜித் சிங் மேடையில் நிகழ்ச்சி நடத்த உள்ளார் எனவும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இலங்கையை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…, வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!