தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கலாச்சார பண்டிகையை போற்றும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநில ஆக்ரா நகரில், கடவுள் ஸ்ரீ ராமரின் திருமண ஊர்வல விழாவான ஜனக்புரி மஹோத்சவ் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து ஆக்ரா நகரில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் (அக்டோபர் 11) நாளையும் (அக்டோபர் 12) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!