தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகளின் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பு வருகிறது. இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கு, எவ்வாறு விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி, தேர்வு நடைபெறும் நாள், ரிசல்ட் நாள், சான்றிதழ் சரிபார்ப்பு நாள் உள்ளிட்டவற்றையும் TNPSC தேர்வாணையம் முன்கூட்டியே அறிவித்து வருகிறது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் TNPSC தேர்வாணையத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது, TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே தேர்வர்களின் சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், போலி சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேரும் நபர்களை கண்டறிந்து, உடனே கிரிமினல் வழக்கில் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC COURSE PACK, BOOK MATERIALS & TEST PACK குறைந்த விலையில் பெற கீழே பூர்த்தி செய்யவும்